மேலும் செய்திகள்
நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
18-Sep-2025
ஈரோடு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில், மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதன்படி வரும், ௧௦ம் தேதி காலை, 10:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை முகாம் நடக்கவுள்ளது.தனியார் துறை வேலை அளிப்போர், எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்த நபர்கள், செவிலியர், டெய்லர், கணினி இயக்குவோர், தட்டச்சர், ஓட்டுனர்கள் என பல துறை சார்ந்தவர்களை பணியமர்த்தம் செய்கின்றனர். கூடுதல் விபரத்துக்கு 86754-12356 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
18-Sep-2025