உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரக் ஷா பந்தன் கொண்டாட்டம்

ரக் ஷா பந்தன் கொண்டாட்டம்

ஈரோடு:சகோதரத்துவத்தை போற்றும் வகையில், ஈரோடு நகரில் வசிக்கக் கூடிய வடமாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர், ரக் ஷா பந்தன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அக்ரஹார வீதியில் நடந்த நிகழ்ச்சியின் போது, திருமணமாகாத இளம் பெண்கள், திருமணமான பெண்கள், தனது குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு சகோதரருக்கும் கையில் ராக்கி கயிற்றை கட்டினர். பின் ஆரத்தி எடுத்து பொட்டு வைத்து, இனிப்பு கொடுத்து பாசத்தை வெளிப்படுத்தினர். அதேபோல், ராக்கி கட்டிய சகோதரிகளுக்கு, ஆண்கள் தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக பரிசு பொருட்களை வழங்கினர். பின் ஒருவருக்கு ஒருவர் ரக் ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்