உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓய்வு அரசு செக்கிங் இன்ஸ்பெக்டர் சாவு

ஓய்வு அரசு செக்கிங் இன்ஸ்பெக்டர் சாவு

பவானிசாகர்,:பவானிசாகரை அடுத்த தொட்டம்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன், 68; ஓய்வு அரசு போக்குவரத்து கழக ஆய்வாளர். மளிகை பொருட்கள் வாங்க இருசக்கர வாகனத்தில், பவானிசாகர் நோக்கி நேற்று முன்தினம் மாலை சென்றார். பவானிசாகர் இரண்டாவது அவின்யூ நால்ரோடு சந்திப்பு அருகே சென்றபோது, பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ரமேஷ் காந்த், 35, அதிவேகமாக ஓட்டி வந்த பைக், நடராஜன் மீது பக்கவாட்டில் மோதியது.இதில் துாக்கி வீசப்பட்டவர் தலையில் பலத்த காயமடைந்தார். சத்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். ரமேஷ் காந்த் மீது பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை