உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அமராவதி ஆற்றில் மூழ்கி ஷொமேட்டோ ஊழியர் பலி

அமராவதி ஆற்றில் மூழ்கி ஷொமேட்டோ ஊழியர் பலி

அமராவதி ஆற்றில் மூழ்கி'ஷொமேட்டோ' ஊழியர் பலிதாராபுரம், அக். 18-தாராபுரத்தை அடுத்த காளிபாளையத்தை சேர்ந்த தாமோதரன் மகன் நந்தகுமார், 27; தனியார் உணவு விற்பனை நிறுவனமான ஷொமேட்டோ நிறுவன ஊழியர். நண்பர்களன நிசார் அலி, 26; ஷாருக்கான், 25, ஆகியாருடன், தாராபுரம் புதிய அமராவதி ஆற்று பாலம் அருகே நேற்று மதியம் குளிக்க சென்றார்.அப்போது ஆற்றில் மூழ்கி தத்தளித்தார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் பலனில்லாததால், தாராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள், 2 மணி நேரம் போராடி, நந்தகுமார் உடலை மீட்டனர். நந்தகுமார் மது குடித்திருந்ததாக தெரிகிறது. இப்பகுதியில் குளித்த பலர் இறந்த நிலையில், அங்கு வைக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கையை மீறி சென்று குளித்ததால், நந்தகுமார் பலியாகி விட்டதாக, அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !