உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கரும்பு ஜூஸ் பிழியும் மெஷின் திருடியவர் கைது

கரும்பு ஜூஸ் பிழியும் மெஷின் திருடியவர் கைது

வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகேயுள்ள குட்டைக்காட்டை சேர்ந்தவர் மாலதி, 39; வெள்ளகோவிலில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகில் கரும்புக்கடை வைத்து, ஜூஸ் பிழிந்து விற்பனை செய்து வருகிறார். ஒரு மாதமாக கடையை பூட்டியிருந்தார். கடந்த, 15ம் தேதி வந்து பார்த்தபோது, கரும்பு பிழியும் இயந்-திரம் திருட்டு போனது தெரிந்தது. புகாரின்படி வெள்ளகோவில் போலீசார் ஆசாமியை தேடி வந்தனர். இது தொடர்பாக நாமக்கல் மாவட்டம் ஓலப்பாளையத்தை சேர்ந்த கதிரவன், 36, என்பவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !