உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாலிபர் பரிதாப பலி

வாலிபர் பரிதாப பலி

ஈரோடு, ஈரோடு, காவிரிக்கரை வைராபாளையம் முருகன் செங்கல் சூளையை சேர்ந்தவர் சசிகுமார், 23. திருமணமாகாதவர். செங்கல் சூளையில் பணியாற்றினார். கடந்த, 5 இரவு மதுபோதையில் அடுக்கி வைத்திருக்கும் செங்கல் மீது படுத்திருந்தார். மறுநாள் காலை பார்த்த போது, செங்கற்கள் அடுக்கி வைத்திருக்கும் இடத்துக்கு இடையே தலைகுப்புற கிடந்தார். உடலில் சிராய்ப்பு காயங்கள் காணப்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை