மேலும் செய்திகள்
கரும்பு தொட்டில் கட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்
11-Dec-2024
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, தீப திருவிழாவில் அருணாசலேஸ்வரர் கிரி-வலம் சென்றார். வழி நெடுகிலும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவி-ழாவில் கடந்த, 13ல், மஹா தீபம் ஏற்றப்பட்டது. விழாவை-யொட்டி உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பரா-சக்தி அம்மன், துர்க்கையம்மனுடன், நேற்று கிரிவலம் சென்றார். வழி நெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். கிரிவலப்பாதையில் அஷ்டலிங்க கோவில்கள், அடி அண்ணாம-லையில் ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. தை மாதத்தில் நடக்கும் திருவூடல் திருவிழா மற்றும் தீப விழாவில், மஹா தீபம் ஏற்றிய மூன்றாவது நாள் என, ஆண்டுக்கு இரு முறை மட்டுமே அருணாசலேஸ்வரர் கிரி-வலம் செல்வார். இதை தொடர்ந்து அய்யங்குளத்தில் நேற்றிரவு தெப்பம் உற்சவம் நடந்தது. இதில் பராசக்தி அம்மன் மூன்று முறை வலம் வந்தார். இந்நிகழ்விலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்-டனர்.
11-Dec-2024