உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தந்தம் விற்க முயற்சி மேலும் மூவர் கைது

தந்தம் விற்க முயற்சி மேலும் மூவர் கைது

அந்தியூர், அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் - சுந்தராம்பாளையம் வாய்க்கால் கரை பகுதியில், யானை தந்தம் விற்பனை செய்ய வந்த, சேலம் மாவட்டம் சங்ககிரி, குள்ளம்பட்டி, அரசிராமணி கணேசன், 49; பெரியசாமி, 56; ஆகியோரை, வனத்துறையினர் பொறி வைத்து பிடித்தனர்.தலைமறைவான மேட்டூர் பாலமலை செல்லப்பன், 40, என்பவரை தேடி வந்தனர். சென்னம்பட்டி வன அலுவலகத்தில் அவர் சரணடைந்தார். அவர் தந்த தகவலின்படி, பாலமலை மணி, 42; கொளத்துார், செங்கல்மேடு பாலமுருகன், 45, ஆகியோரை, வனத்துறையினர் நேற்று கைது செய்தனர். மூவரையும் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ