ரயில்வே நுழைவு பாலத்தில் தொடங்கிய போக்குவரத்து
ஈரோடு, ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில் மழைநீர் வடிகால் சேதமடைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். ரயில்வே நிர்வாகம் சார்பில் இரு மாதங்களுக்கு முன் சீரமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக நாடார்மேடு பகுதியில் இருந்து காளைமாட்டு சிலை நோக்கி வரும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. லெனின் வீதி, சாஸ்திரிநகர், காசிபாளையம், சென்னிமலைரோடு வழியாக திருப்பி விடப்பட்டன. இந்நிலையில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நிறைவடைந்தது. நேற்று முன்தினம் முதல் கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.