நலத்துறை ஆய்வு கூட்டம்
ஈரோடு, மாநில சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவி, திட்ட செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டம், சிறுபான்மையினர் நல சிறப்புக்குழு மற்றும் தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர் சுபேர்கான் தலைமையில் ஈரோட்டில் நடந்தது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார் முன்னிலை வகித்தார். முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம், பணியாளர்கள் நலவாரியம், வக்ப் நிறுவனங்களில் பணிபுரியும் உலமா பணியாளர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டூவீலர் போன்ற திட்ட பயன்கள் குறித்து பட்டியல் சரி பார்க்கப்பட்டது.