உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மேற்கு வங்க சிறுமி பெருந்துறையில் மீட்பு

மேற்கு வங்க சிறுமி பெருந்துறையில் மீட்பு

பெருந்துறை: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சாம்ராட் சர்தார், 23; இவர், 16 வயது சிறுமியை காதலித்து, கடந்த ஏப்., மாதம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து, பெருந்துறைக்கு அழைத்து வந்து, பணிக்கம்பாளையத்தில் தங்கி கூலி வேலை செய்துவந்தார். இதுதொடர்பாக மேற்கு வங்க போலீசார் விசாரித்து வந்தனர். பணிக்கம்பாளையத்தில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்-படி வந்து, பெருந்துறை போலீசார் உதவியுடன் சிறுமியை மீட்டனர். கடத்தி வந்த சாம்ராட் சர்தாரை கைது செய்து, பெருந்துறை குற்-றவியல் நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தி, மேற்கு வங்காளத்-துக்கு அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ