ரயில் மோதி பெண் பலி
ஈரோடு, ஊஞ்சலுார் - கொடுமுடி ரயில்வே ஸ்டேஷன் இடையே தண்டவாள பகுதியில், பெண் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஈரோடு ரயில்வே போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். இதில் பலியான பெண்ணுக்கு, 45 வயது இருக்கும். தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முயன்றபோது ரயில் மோதியதில், முற்றிலும் முகம் சிதைந்து இறந்ததும் தெரிய வந்தது.