இளம் பெண் இரு மகள்களுடன் மாயம்
ஈரோடு: ஈரோடு சூரம்பட்டி, 7வது வீதி என்.ஜி.ஜி.ஓ., காலனி சிவக்குமார் மனைவி கஸ்துாரி, 31. கணவன் மனைவி இடையே குடும்ப தக-ராறு இருந்தது. இதனால், தன் தாய் வீட்டில் கஸ்துாரி இருந்து வருகிறார். கடந்த, 24 மதியம், 2:00 மணிக்கு கஸ்துாரி தனது மகள்கள் பத்மஸ்ரீ, 13, விஜய்ஸ்ரீ, 10, ஆகியோருடன் வீட்டை விட்டு வெளியே சென்றார். வெகு நேரமாகியும் வீட்டுக்கு வர-வில்லை. இதுகுறித்து கஸ்துாரி தாய் மரகதமணி அளித்த புகார்-படி, சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.