உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மது பாட்டில் விற்ற 2 பேர் கைது

மது பாட்டில் விற்ற 2 பேர் கைது

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த பாக்கம் கிராமத்தில் மது பாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த பாக்கம் கிராமத்தில் நேற்று முன்தினம் வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.அப்போது அப்பகுதியில் பைக்கில் வந்த 2 பேரை சோதனை செய்ததில் மது பாட்டில் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் வினோத், 21; கணேசன் மகன் பாண்டியன், 21; என தெரியவந்தது. உடன் இருவரையும் கைது செய்து, மதுபாட்டில்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி