உள்ளூர் செய்திகள்

கூலி தொழிலாளி மரணம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பஸ்நிலையம் அருகே கூலித்தொழிலாளி மரணம் அடைந்தார்.சின்னசேலம் அடுத்த க.செல்லம்பட்டையை சேர்ந்தவர் கணேசன், 60; திருப்பூரில் கூலி வேலை செய்து வந்தார். ரேஷன் கடையில் கை விரல் ரேகை பதிவு செய்ய, கடந்த 5 ம் தேதி இரவு திருப்பூரில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு பஸ்சில் வந்தார். அடுத்த நாள், கள்ளக்குறிச்சி பஸ்நிலையம் அருகே இறந்து கிடந்தார். தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார், அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி