உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மொபட்டில் இருந்து விழுந்தவர் பலி

மொபட்டில் இருந்து விழுந்தவர் பலி

சின்னசேலம்; பாண்டியங்குப்பம் அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.சின்னசேலம் அடுத்த திம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன் மகன் சரவணன், 54; கூலித் தொழிலாளி. இவர், கடந்த மாதம் 27ம் தேதி மாலை 6:30 மணியளவில் சின்னசேலத்திலிருந்து திம்மாபுரம் நோக்கி தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். பாண்டியங்குப்பம் பிரிவு சாலை அருகே சென்றபோது மொபட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர், நேற்று மாலை இறந்தார்.புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி