மேலும் செய்திகள்
90 மாற்று திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
21-Feb-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில், 86 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. சிறுவங்கூர், கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார். எலும்பு முறிவு டாக்டர் பால சுப்ரமணியன், கண் டாக்டர் லோகநாயகி, மனநல டாக்டர் உஷா நந்தினி, காது மூக்கு தொண்டை டாக்டர் வாசவி, முடநீக்கியல் வல்லுநர் பிரபாகரன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பங்கேற்றேனர். முகாமில்,120 மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தகுதிவாய்ந்த, 86 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
21-Feb-2025