உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தொடர் மழையால் ஆற்றில் வெள்ளம்

தொடர் மழையால் ஆற்றில் வெள்ளம்

சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கன மழையால் மணி நதியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.சங்கராபுரம் பகுதியில் கடந்த இரு நாட்களாக இரவில் விடாது கன மழை பெய்து வருகிறது. கல்வராயன்மலையில் பெய்த கனமழையால் மணி நதியில் நேற்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பூட்டை, செம்பராம்பட்டு, தியாகராஜபுரம் கிராம ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ