மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்...
17-Dec-2024
முன்விரோத தகராறு 9 பேர் மீது வழக்கு
23-Nov-2024
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே வீட்டுமனை தொடர்பாக ஏற்பட்ட முன்விரோத தகராறில் இரு தரப்பையும் சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரை கைது செய்தனர்.திருக்கோவிலுார் அடுத்த திம்மச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர், 49; இவரது தம்பி கோவிந்தன், 48; இருவருக்கும் இடையே வீட்டுமனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.இது தொடர்பாக நேற்று முன்தினம் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கோவிந்தன், அவரது மனைவி அஞ்சாமணி, 40; மகன்கள் மின்னல் ராஜ், 24; வாசு, 18; ஆகியோர் சேகர், அவரது மனைவி கோவிந்தம்மாள் இருவரையும் சரமாரியாக தாக்கினர். இந்த மோதலில் இருவரும் காயம் அடைந்தனர். இவர்கள் திருப்பி தாக்கியதில், மின்னல்ராஜ் காயமடைந்தார். இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் சேகர், கோவிந்தன் உட்பட 6 பேர் மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்குப்பதிந்து கோவிந்தன், மின்னல் ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
17-Dec-2024
23-Nov-2024