உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உலகளந்த பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் 6ம் நாள் விழா

உலகளந்த பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் 6ம் நாள் விழா

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் உற்சவத்தின் 6ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், மணவாள மாமுனிகள் விழாவின் 6ம் நாளான நேற்று காலை 6:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 6:45 மணி முதல் 8:45 மணி வரை நித்திய பூஜை, தொடர்ந்து மணவாள மாமுனிகள் சன்னதியில் இருந்து எழுந்தருளி பெருமாள், தாயார், வேணுகோபாலன் சன்னதியில் மங்களா சாசனம், 11:00 மணிக்கு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு மணவாள மாமுனிகள் எழுந்தருளி சன்னதி உலாவும், தொடர்ந்து நான்காயிர திவ்ய பிரபந்த சேவை, திருவாராதனம். 7:30 மணிக்கு சாற்றுமுறை நடந்தது. ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகலன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ