உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தென்கீரனுார் மேம்பாலம் அருகே, ஏமப்பேரை சேர்ந்த கோவிந்தன் மகன் பாபு,36; என்பவர் மதுபாட்டில் விற்றது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 5 மதுபாட்டில்கள், 400 ரூபாய், ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ