உள்ளூர் செய்திகள்

உண்டியல் திறப்பு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. உளுந்துார்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கை எண்ணப்பட்டது. கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்லையா, இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் வதனா முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. அதில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 391 ரூபாய் காணிக்கைத் தொகை இருந்தது. இந்த காணிக்கை தொகை அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை