உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

கச்சிராயபாளையம்: தெங்கியாநத்தம் கிராமத்தில் மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் நேற்று காலை 7:00 மணியளவில் தெங்கியாநத்தம் கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மணி, 53; என்பவர் தனது வீட்டில் மறைத்து வைத்து மது பாட்டில் விற்றது தெரியவந்தது. அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து மணி மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை