உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உண்டியலை உடைத்து காணிக்கை திருட்டு

உண்டியலை உடைத்து காணிக்கை திருட்டு

கச்சிராயபாளையம்: அம்மாபேட்டை திரவுபதி அம்மன் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். கச்சிராயபாளையம் அடுத்த அம்மாபேட்டை திரவுபதி அம்மன் கோவில் பூசாரி நேற்று காலை கோவிலை திறந்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை திருடு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ