வாகன சோதனை 24 பேர் மீது வழக்கு
சங்கராபுரம் ; சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் அமானுல்லா தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். இதில் ெஹல்மெட் அணியாமல், குடிபோதையில் வாகனம் ஓட்டியது, ஓட்டுனர் உரிமம் இல்லாதது. சீட் பெல்ட் அணியாமல் ஓட்டியது, வேகமாக ஓட்டியது என, போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 24 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.