உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பொது இடத்தில் மது அருந்திய 44 பேர் மீது வழக்கு பதிவு

பொது இடத்தில் மது அருந்திய 44 பேர் மீது வழக்கு பதிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்தில் பொது இடத்தில் மது அருந்திய 44 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போக்குவரத்திற்கும் , மக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் பொது இடத்தில் மது அருந்தும் நபர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.அதன்படி, கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் நேற்று முன்தினம் பொது இடத்தில் மது அருந்தியது தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் 18 நபர்கள், சின்னசேலம் 11 பேர், கச்சிராயபாளையம் 7 பேர், தியாகதுருகம் 4 பேர், வரஞ்சரம் மற்றும் கரியலுார் போலீஸ் ஸ்டேஷன்களில் தலா ஒருவர் என மொத்தமாக 44 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை