உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகள் மாயம் : தந்தை புகார்

மகள் மாயம் : தந்தை புகார்

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார். வரஞ்சரம் அடுத்த விருகாவூரைச் சேர்ந்தவர் ராக்கன் மகள் ராஜஸ்ரீ, 20; இவர், திருச்செங்கோடு தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் படித்து வருகிறார். தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தவர் கடந்த 21ம் தேதி காலை கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ராக்கன் அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி