உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பிளாஸ்டிக் சேரில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலி

பிளாஸ்டிக் சேரில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலி

சின்னசேலம்: மேல்நாரியப்பனுார் கிராமத்தில் வீட்டை சுத்தம் செய்யும்போது, பிளாஸ்டிக் சேரில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சமுத்து மகன் நடராஜன், 45; நெல் அறுவடை இயந்திர டிரைவரர். இவர் கடந்த 9ம் தேதி இரவு வீட்டை சுத்தம் செய்தார். அப்போது, பிளாஸ்டிக் சேர் மீது ஏறி அலமாரியை சுத்தம் செய்தபோது, நிலை தடுமாறி கிழே விழுந்தார். இதில் நடராஜனுக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. நடராஜனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்த புகாரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி