மின்னணு ஓட்டு பதிவு; இயந்திரங்கள் ஆய்வு
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூரில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் ஓட்டு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் பல்வேறு கால இடைவெளியில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, கலெக்டர் பிரசாந்த் நேற்று மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்தார். அப்போது துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.