உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குறைகேட்புக் கூட்டம்: 321 மனுக்கள் வழங்கல்

குறைகேட்புக் கூட்டம்: 321 மனுக்கள் வழங்கல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 321 மனுக்கள் பெறப்பட்டது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்டுபுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.இதில் நிலப்பட்டா, நில அளவை, பட்டா மாற்றம், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை, மகளிர் உரிமைத் தொகை, வேளாண்மை துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் கிராம பொது பிரச்னைகள், குடிநீர் வசதி, சாலை வசதி, வேலை வாய்ப்பு வேண்டி மொத்தம் 321 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. தொடர்ந்து, மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.மேலும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு 29 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சிறப்பு நாற்காலியை கலெக்டர் வழங்கினார்.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் உள்ளிட்ட அனைத்துது றை துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை