மேலும் செய்திகள்
குட்கா விற்பனை ஒருவர் கைது
28-Apr-2025
ரிஷிவந்தியம், : பகண்டை கூட்ரோடு அருகே, மளிகை கடையில் விற்பனைக்காக ஹான்ஸ் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் சேட்டு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இளையனார்குப்பம் கிராமத்தை சேர்ந்த மன்னார் மகன் அருள்,38; என்பவர் தனது மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, கடையில் இருந்த ரூ.280 மதிப்புள்ள ஹான்ஸ் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
28-Apr-2025