உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

 வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

கச்சிராயபாளையம்: கரடிசித்தூர் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார், சூசை நகரைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் லுார்துசாமி மனைவி கிரில்சயோனா, 42; இவர், கடந்த 24ம் தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு கரடிசித்துாரில் உள்ள சர்ச்சில் நடந்த திருப்பலியில் பங்கேற்க சென்றார். இரவு 11:00 மணியளவில் வீட்டிற்கு வந்த போது கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஐந்தரை சவரன் நகை மற்றும் 70 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது. புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி