வீட்டு சுவர் இடிந்து சேதம்
உளுந்துார்பேட்டை: அக். 25-: உளுந்துார்பேட்டையில் தொடர் மழையால் வீட்டு சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. உளுந்துார்பேட்டையில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை காரணமாக உளுந்துார்பேட்டை நகராட்சி பாளையப்பட்டு 2வது தெருவைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி முருகன், 58; என்பவரது வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது.