மேலும் செய்திகள்
வரதட்சணை கொடுமை கணவன் மாமியார் மீது வழக்கு
28-Jul-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே மனைவியை அடித்து துன்புறுத்தியது தொடர்பாக கணவர் உட்பட அவரது குடும்பத்தினர் மூவர் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த முடியனுார் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு மகன் மணிவண்ணன், 31; இவருக்கும் சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த பிச்சமுத்து மகள் உமா, 24; என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2023ம் ஆண்டு திருமணம் நடந்தது. தொடர்ந்து, இருவரும் முடியனுாரில் உள்ள வீட்டில் வசித்தனர். இந்நிலையில், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. இதில், கணவன் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து உமாவை அடித்து துன்புறுத்தி உள்ளனர். இது குறித்து உமா அளித்த புகாரின் பேரில், கணவன் மணிவண்ணன், மாமியார் புஷ்பா, உறவினர் ஜீவா ஆகிய 3 பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
28-Jul-2025