புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணி ஆய்வு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் 35.18 ஏக்கர் பரப்பளவில் ரூ.139.41 கோடி மதிப்பில், அனைத்து துறை அலுவலகங்களும் செயல்படும் வகையில் 8 தளங்களுடன் கூடிய புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணி நடந்து வருகிறது. கட்டுமான பணியை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். கட்டுமான பணியை தரமாக மற்றும் விரைவாக மேற்கொள்ள வேண்டும். எஞ்சியுள்ள பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்திடுமாறு பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வகுமார், உதவி செயற்பொறியாளர் மாலா, உதவி பொறியாளர் இமாம் ஷெரிப் உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.