மேலும் செய்திகள்
மனைவி மாயம் கணவர் புகார்
24-Nov-2024
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அடுத்த செம்படாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் கண்ணுசாமி, 49;, இவர் கடந்த ஒரு ஆண்டாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் கடந்த 20 ஆம் தேதி பூச்சி மருந்து குடித்து மயங்கினார்அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கண்ணு சாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
24-Nov-2024