பீடி பற்றவைத்த போது தீக்காயமடைந்தவர் பலி
கள்ளக்குறிச்சி: திருநாவலுார் அருகே பீடி பற்றவைத்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.திருநாவலுார் அடுத்த பா.கிள்ளனுாரை சேர்ந்தவர் குப்பன்,55; இவருக்கு மதுப்பழக்கம் உள்ளது. கடந்த 22ம் தேதி மாலை மதுபோதையில் கட்டிலில் படுத்திருந்த குப்பன், தீக்குச்சியால் பீடி பற்ற வைத்தார்.அப்போது குப்பன் உடல் மீது தீ பற்றியது. தீக்காயம் அடைந்த குப்பனை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.