உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மொபைல் போன் திருடியவர் கைது

மொபைல் போன் திருடியவர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் மொபைல் போன் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த எஸ்.மலையனுாரைச் சேர்ந்தவர் ஞானவேல் மகன் முத்பூராஜ், 34; இவரது மனைவிக்கு கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. மனைவிக்கு உதவி செய்வதற்காக முத்பூராஜ் மருத்துவமனையிலேயே இருந்துள்ளார்.நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணியளவில் முத்பூராஜின் சட்டை பையில் இருந்த மொபைல் போனை மர்ம நபர் திருடிக்கொண்டு தப்பியோடினார்.இதனைப் பார்த்த அங்கிருந்திவர்கள் அந்த நபரை பிடித்து கள்ளக்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், கள்ளக்குறிச்சி அகரத்தான்கொல்லை தெருவைச் சேர்ந்த சக்திவேல், 41; என்பது தெரிந்தது. இதையடுத்து சக்திவேலை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை