உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகள் மாயம் : தாய் புகார் 

மகள் மாயம் : தாய் புகார் 

கள்ளக்குறிச்சி: அகரகோட்டாலத்தில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி அடுத்த அகரகோட்டாலத்தை சேர்ந்தவர் மகேந்திரன் மகள் தேவிபிரியா, 19; இவர், தேவியாக்குறிச்சி தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., மூன்றாமாண்டு படிக்கிறார். கடந்த 8ம் தேதி மாலை தாய் சரண்யா கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றதால், மகள் தேவிபிரியா வீட்டில் தனியாக இருந்தார். இரவு 7 மணியளவில் சரண்யா வீட்டிற்கு வந்து பார்த்த போது ம கள் தேவிபிரியா வீட்டில் இல்லாததால் அதிர்ச்சியடைந்து பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்காததால் மாயமான மகள் தேவிபிரியாவை கண்டுபிடித்து தரக்கோரி, தாய் சரண்யா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ