உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாரதா ஆசிரமத்தில் முளைப்பாரி விழா

சாரதா ஆசிரமத்தில் முளைப்பாரி விழா

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் விவேகானந்தா சேவா பிரதஷ்டான் சார்பில் உலக நன்மை, அமைதி மற்றும் மழை வேண்டியும் முளைப்பாரி விழா நடந்தது. விழாவிற்கு, விவேகானந்தா சேவா பிரதஷ்டான் இயக்குனர் யத்தீஸ்வரி ஆத்மா விகாச ப்ரியா அம்பா தலைமை தாங்கினார். சாரதா ஆசிரம மேலாளர் யத்தீஸ்வரி அனந்த பிரேமா ப்ரியா அம்பா, விழாவை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர் தொழிலதிபர் ருத்ரகுமார் மற்றும் லலிதா பங்கேற்றனர். விழாவில் பள்ளியந்தாங்கல், அஜீஸ் நகர், ஆர்.ஆர்.குப்பம், மூலசமுத்திரம், ஏ.சாத்தனுார், எடைக்கல், பாலி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். சாரதா அம்பாள் மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் சாரதா அம்பாள், எள், நெல், கம்பு, கேழ்வரகு சோளம், வேர்க்கடலை உள்ளிட்ட பல்வேறு தானியங்களைக் கொண்டு தானிய லட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார். மேலும், விழாவில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை