உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  நர்சிங் பயிற்சி மாணவி மாயம்

 நர்சிங் பயிற்சி மாணவி மாயம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் மருத்துவமனை பயிற்சிக்கு சென்ற மகள் மாயமானதாக தாய் போலீசில் புகார் செய்துள்ளார். திருக்கோவிலுார் அடுத்த திம்மச்சூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, திருக்கோவிலுாரில் உள்ள தனியார் இன்ஸ்டியூட்டில் நர்சிங் 2ம் ஆண்டு படித்து வருகிறார். சந்தப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 1 மாதமாக பயிற்சி மேற்கொண்டு வந்தார். கடந்த 6ம் தேதி பயிற்சிக்கு சென்ற மாணவி மருத்துவமனையில் இருந்து மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில், திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை