உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண் மாயம் போலீசார் விசாரணை

பெண் மாயம் போலீசார் விசாரணை

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். சங்கராபுரம் அடுத்த மணக்காடு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மனைவி பிரியா,25; இவர் கடந்த 2 ம் தேதி 9 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை