மேலும் செய்திகள்
பைக் திருட்டு
11-Apr-2025
மொபட் திருட்டு
28-Mar-2025
திருக்கோவிலுார், ; காவலர் குடியிருப்பில் பைக்கை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருக்கோவிலுார் போலீஸ் ஸ்டேஷனில் காவலராக பணிபுரிபவர் அசோக்குமார்,35; இவர், கடந்த 12ம் தேதி இரவு தனது பைக்கை சந்தைப்பேட்டை காவலர் குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தி விட்டு பணி நிமித்தமாக கள்ளக்குறிச்சி சென்றார். மறுநாள் காலை 8:00 மணிக்கு மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது பைக்கை காணாதது அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து பைக்கை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
11-Apr-2025
28-Mar-2025