உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ராணுவ வீரர்களுக்கு பாராட்டு சங்கராபுரத்தில் ஊர்வலம்

ராணுவ வீரர்களுக்கு பாராட்டு சங்கராபுரத்தில் ஊர்வலம்

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்து ஊர்வலம் நடந்தது.அனைத்து பொது சேவை அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில், இந்திய ராணுவத்திற்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கும் வகையில் நடந்த ஊர்வலத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் முத்துகருப்பன் தலைமை தாங்கினார். பெட்ரோல், டீசல் கூட்டமைப்பு சங்கத் தலைவர் ஜனார்த்தனன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். பொது சேவை ஒருங்கிணைப்பாளர் குசேலன் வரவேற்றார்.பேரூராட்சி சேர்மன் ரோஜா ரமணி, வியாபாரிகள் சங்க தலைவர் சக்ரவர்த்தி, நுகர்பொருள் சங்க தலைவர் சீனிவாசன், இன்னர் வீல் கிளப் தலைவர் சுபாஷினி, லியாகத் அலி, இதாயத்துல்லா, சாதிக்.மோட்டார் வாகன சங்க தலைவர் விஜயகுமார், திருக்குறள் பேரவை லட்சுமிபதி, ஜெய்பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார், முன்னாள் ரோட்டரி தலைவர் சுதாகரன், சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். துரைதாகப்பிள்ளை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ