உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மொபைல் சிக்னல் பிரச்னையால் பொதுமக்கள் அவதி: அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின் அவலம்

மொபைல் சிக்னல் பிரச்னையால் பொதுமக்கள் அவதி: அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின் அவலம்

கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் அரசு மருத்துவ கல்லுாரி, மருத்துவமனை கடந்த 3 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக நாள்தோறும் வந்து செல்கின்றனர். ஒவ்வொருக்கும் மொபைல் போன் தற்போது மிகவும் அத்தியாவசியமாக இருக்கிறது. மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் குடியிருப்பு, கல்லுாரி மாணவர்கள் விடுதி கட்டடங்களில் 'மொபைலுக்கானசிக்னல் முற்றிலும் கிடைப்பதில்லை.இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சை வரும் நோயாளிகள், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு அவர்களது உறவினர்கள் அவசர நேரங்களில் வெளியே உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு மருத்துவர்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள முடியவதில்லை. கட்டடத்தின் ஜன்னல் ஓரங்களில் சென்றால் மட்டுமே பேசமுடியும்.சிறுவங்கூரில் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை துவங்கியது முதல் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் 'மொபைல் சிக்னல்' பிரச்சனைக்கு தீர்வு காண சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.மாவட்டத்தில் கடந்த ஆண்டு மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சிகிச்சைக்கு வந்த சிலரது உடல் நிலை மிகவும் மோசமானபோது புதுச்சேரி, சேலம், விழுப்புரம் ஆகிய பகுதிக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.மேலும் டாடா ஏஸ், பள்ளி வேன்கள், பஸ்கள் போன்ற வாகனங்களில் விபத்து நேரிடும் போது பலர் காயமுற்று சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகின்றனர். அத்தருணத்தில் மருத்துவமனைக்கு செல்லும் குடும்பத்தினர், அங்கிருந்து வெளியே உள்ள உறவினர்களிடம் உடனடியாக தொடர்பு கொள்ள முடிவதில்லை.உயர் சிகிச்சை பெற வெளியூர் செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதும், உடன் இருந்தோர் அலறியடித்து கொண்டு தங்களது குடும்பத்தினர், உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் அங்கும் இங்குமாக அலைந்து திரிகின்றனர்.தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள், அவர்களுக்கு உதவியாக இருக்கும் உறவினர்கள் வெளியே சென்றால், அவசரத்திற்கு அவர்களை கூட தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது.உள்ளே அவசர சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் நிலைகள் குறித்து, உடன் இருப்போர் வெளியே வந்து தெரிவிக்கும் வரை குடும்பத்தினர், உறவினர்கள் 'திக்' 'திக்' மனநிலையிலேய உள்ளனர்.மேலும், அரசுத்துறை உயர் அதிகாரிகள், மருத்துவர்களை உடனுக்குடன் தகவல்களை கேட்டறிய முடியாத நிலை ஏற்பட்டது. மருத்துவர்கள், நோயாளிகள், அவர்களுக்கு உதவியாக இருப்போர் என அனைவரும் அவ்வப்போது கட்டடத்தின் ஜன்னல் ஓரங்களில் வந்து பேசி விட்டு செல்லும் நிலைதான் காணப்பட்டது. 'மொபைல் நெட்வொர்க்' பிரச்னைக்கு தீர்வு காணகோரி மருத்துவ கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.எனவே, சிறுவங்கூரில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கட்டடத்திற்குள் தங்கு தடையின்றி சிக்னல் கிடைக்கும் வகையில் அப்பகுதியில் 'மொபைல் டவர்கள்' அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை