உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவி மாயம்

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே காணாமல் போன பள்ளி மாணவி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது 16 வயது மகள் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவரை, கடந்த 1ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

மேலும் ஒரு வழக்கு

சங்கராபுரம் அடுத்த கீழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகள் ஸ்ரீமதி, 21; தலைவாசலில் உள்ள தனியார் கல்லுாரியில் எம்.எஸ்சி., இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவரை கடந்த 30ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்த புகார்களின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை