உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விபத்தில் சிக்கிய வாலிபர் சிகிச்சை பலனின்றி இறப்பு

விபத்தில் சிக்கிய வாலிபர் சிகிச்சை பலனின்றி இறப்பு

கள்ளக்குறிச்சி : விபத்தில் சிக்கி படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த வி.பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன் மகன் முத்து,20; இவர் கடந்த 17ம் தேதி மாலை தனது நண்பர் தமிழரசன்,24; என்பவருடன் பைக்கில், கள்ளக்குறிச்சிக்கு சென்றார்.பெருவங்கூர் தனியார் ரைஸ்மில் அருகே சென்றபோது, நிலைதடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தனர். அதில், படுகாயமடைந்த இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று காலை இறந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி