மேலும் செய்திகள்
விவசாயிகளுக்கு பிரத்யேக அடையாள எண் கட்டாயம்
29-Nov-2025
கள்ளக்குறிச்சி: விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை எண் பெறாத விவசாயிகள் இம்மாத 28 ம் தேதிக்குள் அடையாள அட்டை பெற வேண்டும் என வேளாண் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; மத்திய மாநில அரசு திட்டங்களின் பயன்பெற ஒவ்வொரு விவசாயிக்கும் தனித்துவ அடையாள அட்டை எண் என்பது இனி வருங்காலங்களில் அத்தியாவசியமான ஒன்றாகும். மேலும் 22 வது பிரதமரின் கவுரவ தொகை பெறுவதற்கும், பயிர் காப்பீட்டு தொகை பெறுவதற்கும் கண்டிப்பாக விவசாய அடையாள எண் தேவை. எனவே விவசாய அடையாள எண் பெறாத விவசாயிகள் அனைவரும் தங்களுக்கு அருகாமையில் உள்ள கணினி சேவை மையத்திலோ அல்லது வட்டார வேளாண்மை தோட்டக்கலை அலுவலகங்களுக்கு சென்று தங்கள் ஆதார் மற்றும் மொபைல்எண், பட்டா விவரங்களுடனும் வரும் டிச.28 ம் தேதிக்குள் விவசாயிகள் அடையாள அட்டை எண் பெற்றுக்கொள்ள வேண்டும்.
29-Nov-2025