உள்ளூர் செய்திகள்

மது விற்ற பெண் கைது

கச்சிராயபாளையம், : கரடிசித்துார் கிராமத்தில் மது பாட்டில் விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு கரடிசித்துார் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அருணாசலம் மனைவி ஜோதி, 63, என்பவர் தனது பெட்டி கடையில் வைத்து, மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை