உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / லாட்டரி சீட்டு விற்ற இரண்டு பேர் கைது

லாட்டரி சீட்டு விற்ற இரண்டு பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில் உள்ள ஒரு கடையில், சின்னக்கண்ணு மகன் துரைராஜ்,55; பாலு மகன் கார்த்திக்,34; ஆகிய இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்றது தெரிந்தது. இதையடுத்து துரைராஜ், கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.950 மதிப்புள்ள 10 லாட்டரி சீட்டுக்களை கள்ளக்குறிச்சி போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை